world

img

ஈரான் கட்டிட விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு ஈரானில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அந்நகரின் மேயரை அதிகாரிகள் கைது செய்தனர்.

திங்களன்று மெட்ரோபால் கட்டிடத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் 10 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் மீட்பு பணிக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், மீட்புப் பணிகள் அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

;