world

img

“மீண்டும் இஸ்ரேல் தெருக்களில் கம்யூனிஸ்டுகள்”

டெல் அவிவ், நவ.8- இஸ்ரேலில் மீண்டும் அதி தீவிர வலதுசாரிகள் ஆட்சி அதிகா ரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மக்களின் பிரச்சனைகளுக்காக மீண்டும் தெருக்களில் இறங்கிப் போராட தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேலில் அரசியல் நிலைத்தன்மை குலைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்திருக்கிறது. தேர்தல் மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்து  காணப்படுகிறது. இந்த நிலையை தீவிர வலதுசாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நிலையான ஆட்சியைத் தங்களால்தான் தர முடியும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர்.

இந்தப் பிரச்சாரத்திற்கு மக்களில் ஒரு பகுதியினர் பலியாகி விட்டனர் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டு கின்றன. முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமை யிலான லிகுட் கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன்  கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து நாடாளுமன்றத்தில் மொத்த முள்ள 120 இடங்களில் 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது. மீண்டும் நேதன்யாஹூ பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச வாக்கு விகிதமும் நிர்ண யிக்கப்படுகிறது. அந்தக் குறைந்தபட்ச வாக்கு இலக்கை எட்டாத கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தற்போதைய தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவளித்த இடது சாரிகள் மற்றும் சில கட்சிகள் தனித்த வேட்பாளர் பட்டியலை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டன.

இடதுசாரிகளுக்கு 5 இடங்கள்

இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட இடது சாரிக் கூட்டணியான ஹடாஸ்-டால் அணியின் பட்டியலில் இருந்து 5 வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளனர். கடந்த தேர்தலில் ஒரு இடம் கூடப் பெறாத நிலையில் தற்போது 1 லட்சத்து 78 ஆயிரத்து 670 வாக்குகளைப் பெற்றதால் வாக்குகள் அடிப்படை யில் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகளின் இந்தப் பட்டியலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்து விட்டு, கடைசி ஒரு மணி நேரம் இருக்கையில் விலகிச் சென்று தனியாகப் போட்டி யிட்ட பலாட் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 2.90 விழுக்காடு களை இந்தக் கட்சி பெற்றது. ஒரே பட்டியலில் நின்றிருந்தால் குறைந்தது 3 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கும். ஆளும் கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் வாக்கு விழுக்காடு குறைந்ததால், அதி தீவிர வலதுசாரிகளுக்கு சாதகமாக முடிந்துள்ளது. தற்போதைய ஆளும் கூட்டணிக்கும், நேதன்யாஹூ  தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 30 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும். பலாட் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடாமல் இருந்திருந்தால், ஆளும் கூட்டணிக்கு தற்போது கிடைத்துள்ள 54 இடங்களை விட  அதிகமாகவே கிடைத்திருக்கும். தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி, ‘‘மக்கள் பிரச்சனைகளுக்காகவும், ஒற்று மைக்காகவும் இஸ்ரேலிய இடதுசாரிகள் மீண்டும் தெருக்களில் இறங்குகிறார்கள். இனவெறி வலதுசாரி அரசுக்கு எதிரான போராட்டம் என்பது யூத-அரசு மக்கள் இணைந்து நடத்தும் போராட்ட மாக இருக்கும் அல்லது போராட்டம் என்பதே இருக்காது’’ என்று கூறியுள்ளது. புதிதாகத் தேர்வாகியுள்ள இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரான அய்டா டோமா சிலிமன் கூறுகையில், ‘‘நாம்  சந்திக்கப் போவது வழக்கமான வலதுசாரியல்ல. ஆழமான இன வெறி, காட்டுத்தனமாகத் தூண்டி விடக்கூடிய, வன்முறையை  கட்டவிழ்த்துவிடும் வலதுசாரிக் கூட்டணியை எதிர்கொள்ள விருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.