world

img

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் தூதரகம் சேதம் அடைந்துள்ளதாக அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயார் செய்கிறது. அதற்கான செறிவூட்டுப் பொருட்களை அதிகமாக வைத்திருக்கிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளின் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இருதரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல், டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணை விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்ததாவது,

ஈரானின் ஏவுகணை விழுந்ததில் தூதரகத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தூதரக நடவடிக்கைகளை இன்று ஒருநாள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.