world

img

இலங்கையின் புதிய இடைக்கால பிரதமர் நியமனம்!

கொழும்பு,செப்.24- இலங்கையின் இடைக்கால பிரதமராக என்பிபி கட்சியின் எம்.பி ஹரிணி அமர சூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் என்பிபி கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். ஜனாதிபதிக்கான பதவியேற்பு விழா நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் இடைக்கால பிரதமராக என்பிபி கட்சியின் எம்.பி யும் கல்வியாளாருமான ஹரிணி அமர சூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.