கொழும்பு, மே 30- இலங்கை ஜனாதிபதியின் இல்ல த்தை முற்றுகையிட முயன்ற மாணவர் கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இலங்கையில் நீடித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்க டிக்குப் பொறுப்பேற்று அந்நாட்டின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவரது இல்லத்தின் அருகே முகா மிட்டுள்ள மக்கள், கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகும் வரை அந்த இடத்திலிருந்து நகரமாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், வீட்டை முற்றுகை யிடும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். காவல்துறையினர் அமைத் திருந்த தடைகளை மாணவர்கள் நீக்கி னர். இதனால் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை காவல்துறை வீசியது. போராட்டம் தொட ரும் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.