world

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி: புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு, மே 20-   இலங்கையில் ரணில் விக்ரம சிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  மே 9-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கு தல் நடத்தியதால் கொழும்பு முழு வதும் வன்முறை பரவியது. இதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.  இதனால், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக் கொண்டார். எனினும் அதிபர் கோத்த பய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வரு கிறது.  இந்நிலையில், விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச் சர்கள் பதவியேற்றுள்ளனர். இதன்படி, துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறி பால டிசில்வா, கல்வித்துறை அமைச்ச ராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத் துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல, நீதித்துறை அமைச்சராக விஜேதாச ராஜபக்சே, சுற்றுலாத்துறை அமைச்சராக ஹரீன் பெர்ணாண்டோ ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார, நவீன் பெர்ணாண்டோ, டிரான் அலஸ் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 

;