world

img

மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்லத் தடை

கொழும்பு, மே 12 - மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்  பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய  மகிந்த ராஜபக்சேவை  திரிகோண மலையில் உள்ள கடற்படை தளத்துக்கு பாது காப்புப் படையினர் அழைத்துச் சென்றனர். தற்போது அவர் குடும்பத்தினருடன் அங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளார். மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்லக்கூடும் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன.  இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர்கள் சங்கத்தி னால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசார ணையில் கொழும்பு நீதிமன்றம், மகிந்த ராஜ பக்சே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள், விசுவாசிகளான  பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமன, காஞ்சனா ஜெயரத்ன. ரோஹித அபேகுணவர்தன, சி. பி.ரத்நாயக்க, சம்பத் அதுகோரள, ரேணுகா பெரேரா, நமல் ராஜபக்சே, சனத் நிஷாந்தன், நிஷாந்தன் ஜெய சிங்க, அமித் அபேவிக்ரம, புஷ்பலால், மகிந்த  ககந்தகம, திலித் பெர்னாண்டோ, தேசபந்து தென்னகோன் என மொத்தம் 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதனிடையே, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் மே 17 அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் வியாழனன்று தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்ட பின் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு உட்படுத்தப்படும் என  இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.