கொழும்பு, ஏப்.10- மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும் என்று மத்திய வங்கி யின் புதிய ஆளுநர் கூறியுள்ளார். ஜனாதிபதி கோத்தபய ராஜ பக்சேயின் ஆட்சியில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் மக்கள் வெகுண்டெழுந்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக் கப்பட்ட நந்தலால் வீரசிங்கே செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான வழிகளில் ஒன்று, மத்திய வங்கியை சுதந்திரமாக செயல் பட அனுமதிப்பதாகும்.நாட்டின் பொரு ளாதார நெருக்கடியை என்னால் தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள் ளேன். மத்திய வங்கியை சுதந்திரமாக நடத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி எனக்கு அளித்துள்ளார். இந்த நெருக்கடி யில் இருந்து நாட்டை மீட்பதற்கான நட வடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே கேட்டுக் கொண்டார். எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடிய ஒரு சுதந்திர நிறுவனமாக மத்திய வங்கியை பேணுவதே எனது நோக்க மாகும். கொள்கை வட்டி விகிதத்தை 7 சதவீதத்திற்கு மேலும் அதிகரிக்க மத் திய வங்கி முடிவு செய்துள்ளது. இலங் கையில் இவ்வளவு அதிக விகிதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.நெருக் கடி நிலைமையை நிவர்த்தி செய்ய தேவையான மற்றும் போதுமான நட வடிக்கைகளை உடனடியாக எடுத்துள் ளோம். சந்தை நம்பிக்கையில் சில ஸ்தி ரத்தன்மையை எதிர்பார்க்கிறேன். திங்கட்கிழமை சந்தை திறந்தவுடன் சந்தைகளில் இருந்து நேர்மறையான எதிர்வினையை எதிர்நோக்கி உள் ளோம். நாங்கள் வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருப்போம். மேலும் வங்கிகளின் முழு ஆதரவும் எங்க ளுக்குத் தேவை. இந்த வாகனம் விபத்துக்குள்ளாகும் முன் அதற்கு பிரேக் போட வேண்டும். இலங்கையில் விஷயங்கள் பெரும் சவா லாக உள்ளன. நாங்கள் தீர்க்கமான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.