இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்யாவை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, தேசிய மக்கள் சக்தி 159 இடங்களை கைப்பற்றியும், 68.63 லட்சம் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமையன்று கொழும்புவில் நடைபெற்றது. இதில் பேசிய ஜேவிபி கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்யாவை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுக்கொண்டார். மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றுக்கொண்டார்.