கொழும்பு/நியூயார்க், ஜூலை 14- இலங்கையில் கடும் பொருளா தார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தி யாவசியப் பொருட்களின் பற்றாக் குறை ஆகியவை மக்களை துய ரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் வெடித்த மக்கள் போராட்டத்தால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார். மாலத்தீவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் அங்கி ருந்து சிங்கப்பூருக்கு செல்ல உள் ளார். அங்கு சென்றபின் தனது ராஜி னாமாவை இலங்கை சபாநாயக ருக்கு அனுப்பக்கூடும் என ராய்ட் டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தி ருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்ப மாக அவர் சிங்கப்பூரிலிருந்து சவூதி அரேபியா செல்ல உள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது இதற்கிடையில் இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரத மர் ரணில் விக்ரமசிங்கேவை, கோத்த பய ராஜபக்சே நியமித்துள்ளார். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பதவி விலக வேண்டுமென்று மக்களின் போராட்டம் தொடர்கிறது. இலங்கை பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற பிரதான சாலையில் பாதுகாப்புப் படையின ரும் போராட்டக்காரர்களும் மோதிக்கொண்டனர். இதில் 84 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்வதால் வியா ழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை ஐந்து மணி வரை ஊரடங்கு நீடிக்கும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரி வித்தன.
கோத்தபய பதவி விலகாவிட்டால்...
இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும், இல்லை யெனில் அவரை பதவியில் இருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்க நேரிடும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
அன்டோனியோ குட்டரெஸ்
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோ னியோ குட்டரெஸ் தெரிவித்துள் ளார். “நான் இலங்கையின் நிலைமை யைத் தொடர்ந்து கவனித்து வரு கிறேன். மோதலுக்கான அடிப்ப டைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பா ளர்களின் தேவைகளை பூர்த்தி செய் வது முக்கியமானது. அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச முயற்சிகளை ஏற்றுக்கொள்ளு மாறு அனைத்துக் கட்சித் தலை வர்களையும் நான் கேட்டுக்கொள்கி றேன்.” என தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.