கொழும்பு,மே 8- இலங்கையை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டு மக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆவேசமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாட்டின் பொரு ளாதாரத்தை சரிசெய்ய முடியாமல் திணறும் இலங்கை ஆட்சியாளர்கள், மக்களின் கொந்தளிப்பான போராட்டத்திற்கு பணிந்துள்ளனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதிதாக ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சே அழைப்பு விடுக்க உள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜ பக்சே ஆகியோரின் குடும்ப ஆட்சியில் மக்களை பிரித்தாளும் இனவாதக் கொள்கையாலும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையாலும் இலங்கை தேசம் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி யுள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்றாலும் பொருளாதார நெருக்கடி சீராக வில்லை. பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தி யாவசிய பொருட்களும் கிடைப்ப தில்லை. இதனால் சாமானிய மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரு கின்றனர்.
இதனால் கொந்தளிப்படைந்த இலங்கை மக்கள் இன,மத வேறுபாடு களை கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டும் என்று முழங்கி வருகின்றனர். மக்களின் போராட்டத்தால் அதி ர்ச்சியடைந்துள்ள ஆட்சியாளர்கள், பதவியை விட்டு விலக மறுக்கின்ற னர். இலங்கையில் மீண்டும் இரண்டா வது முறையாக அவசர நிலை பிர கடனத்தை அமல்படுத்தியுள்ளனர். ஆனாலும் மக்கள் போராட்டத்தை கை விடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவசர நிலை பிரகடனத்துக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இலங்கை மக்க ளின் உண்மையான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நீண்ட கால தீர்வுகளே அவசியமாகும் என்றும், மாறாக அவசரகால சட்டத்தினால் அதனை செய்ய முடியாது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. அடிப் படை உரிமைகள், சுதந்திரம் என்பவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக போராடும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி கள் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங், இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் சாரா ஹூல்டன், இலங்கைக்கான நியூசிலாந்து தூதர் மைக்கல் அப்பல்டன், இலங்கைக் கான கனடா தூதர் டேவிட் மெக் கின்னன், நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பத வியை இன்று (திங்கள்) ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. புதிய பிரதமராக பதவியேற்கு மாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ள தாகவும் கூறப்படுகிறது. இதுதொடர் பாக சஜித் பிரேமதாசாவை, ஜனாதி பதி கோத்தபய ராஜபக்சே தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசிய தாகவும், இடைக்கால அரசை நடத்து மாறும் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி
நாடாளுமன்ற வளாகப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கு மாறு தலங்கமை காவல்துறை சார்பில், கடுவலை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி தடைவிதிக்க மறுத்து, காவல்துறை யின் கோரிக்கையை நிராகரித்து உத்தர விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், நீதிபதி சானிமா விஜேபண்டாரவின் வீட்டுக்கு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நீதிபதியின் வீட்டிற்கு அளித்த பாது காப்பை விலக்கிக் கொள்ளவில்லை என்று காவல்துறையின் ஊடக பொறுப்பாளர் அத்தியட்சர் நிஹால் தெரிவித்துள்ளார். மக்களின் நியாயமான, கொந்தளிப்பான போராட்டங்களை ஆட்சியாளர்களால் தடுக்க முடியாது. மக்கள் விரோத ஆட்சியாளர்களை மக்கள் போராட்டங்களால் தூக்கி யெறிந்துள்ளனர் என்பதே வரலாறு. அதற்கு இலங்கை விதிவிலக்கல்ல.