புதுதில்லி:
இந்தியாவின் சிவசேனா கட்சியைப் போல, இலங்கையில் ‘சிவசேனை’ என்றஅமைப்பைத் துவங்கியவர்மறவன்புலவு சச்சிதானந் தன். இவர் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் ‘பாரதிய ஜனதா கட்சி’ என்றபெயரில் ஒரு கட்சி தொடங் கம் திட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதனிடையே, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீ. முத்துச்சாமி என்பவர், 6 மாதத்துக்கு முன்னரே ‘பாரதிய ஜனதா கட்சி’என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்கிவிட்டோம்என்று தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்ல, ‘பாரதியஜனதா’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றெல் லாம் எங்களுக்குத் தெரியாது. இந்தச் சொல் எந்த மொழிச் சொல் என்பதும் தெரியாது. கேட்பதற்கு நன்றாக இருந்தது. அதனாலேயே ‘பாரதியஜனதா கட்சி’ என்ற பெயரில்கட்சியை தொடங்கி விட்டோம் என்றும் அப்பாவித் தனமாக கூறியிருக்கிறார்.மேலும், “நாங்கள் இலங்கையில் ஆரம்பித் துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்தியாவில் உள்ளபாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதால், எங்கள் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே 1,500 பேர் விலகியும் விட்டனர்; இது எங்களுக்கு மிகவும்வருத்தம் தருகிறது” என்றும்புலம்பியுள்ளார்.