இந்தோனேஷியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேஷியாவின் கிழக்கு மாகாணத்தில் இன்று பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை பருவகால மற்றும் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த பிப்ரவரியில் இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 13 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.