இந்தோனேஷியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறயதாவது
மேற்கு இந்தோனேசியாவின் படாங்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இந்தோனேஷியா மட்டுமல்லாது சுமத்ரா தீவு மற்றும் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கில் 66 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கி.மீ அடியில் தாக்கியது.
இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவிஇயற்பியல் அமைப்பின் தலைவர் ட்விகோரிடா கர்னாவதி, சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவித்தார். ஆனால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தார்.
மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். கட்டடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.