world

img

பிலிப்பைன்ஸை புரட்டியெடுத்த கொம்பாஸு புயல் : 9 பேர் பலி.

மணிலா 
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் வெப்ப மண்டல புயலான கொம்பாஸு புயல் காரணமாக ப பலத்த மழை பெய்து வருகிறது.அந்நாட்டின் முக்கிய தீவு நகரமான பலவான் மழை வெள்ளத்தால் கடுமையான சேதாரத்தை சந்தித்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமப்பகுதிகள் துண்டிக்கப்பட்டள்ளன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். ஆறுகளில் உடைப்பால் பலர் வீடுகளை இழந்தனர். பிலிப்பைன்ஸ் கடலோர படையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.  

;