states

img

ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி  

ராஜஸ்தானில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ராஜஸ்தான் மாநிலத்தின் பர்வாடா என்ற பகுதியில் இருந்து உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட 9 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாம்பல் எனப்படும் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர மீட்புப்படையினர் காரிலிருந்து 7 உடல்களையும் தண்ணீரில் இருந்து 2 உடல்களையும் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஆற்றில் கவிழ்ந்த காரை கிரேன் மூலம் மீட்கப்பட்டது.    

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்பொழுது இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். 

 

;