world

img

இந்தோனேசியாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவில் அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி, பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்ததில் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இந்தோனேசியாவில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகரான மனோக்வாரிக்கு லாரி ஒன்று 29 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அர்ஃபாக் மலை மாவட்டத்தின் மின்யாம்போ கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கம் அருகே வந்துகொண்டிருந்தபோது லாரி பாறை ஒன்றின் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஓட்டுனர் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயமடைந்துள்ளனர்.  

அதனைதொடர்ந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் பாரிசியன் ஹெர்மன் குல்டோம் தெரிவித்தார்.  

லாரியில் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.