world

img

பருவநிலை மாற்றம் குறித்த முக்கிய அறிக்கையை ஐநா அறிவியல் குழு இன்று வெளியிடுகிறது

புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்குக் கீழே வைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 200 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது.

ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களைத் தொகுத்து அறிக்கையாக இன்று வெளியிடுகிறது. இந்த அறிக்கை, நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐ.நா. காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, புவி வெப்பமடைதலின் தற்போதைய பாதிப்புகள் மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்த சமீபத்திய உண்மைகளை வழங்கும்.

கிட்டத்தட்ட 200 நாடுகள் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது உலக வெப்ப மயமாதலை 2 ° C க்கும் குறைவாகவும், 1.5 ° C க்கு மிகாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டது.

இதனை தொடர்ந்து, அக்டோபர்  31 முதல் நவம்பர் 12 வரை கிளாஸ்கோவில் நடைபெறும் ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டில், ஒவ்வொரு நாடும் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெறவும் என்ன செய்ய முடியும் என்று விவாதிக்கும்.

;