அரைக்கம்பத்தில் ஐநா கொடிகள்
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஐநா ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.மக்கள் சேவையில் தங்கள் உயிரை தியாகம் செய்த ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நியூயார்க் உட்பட அனைத்து ஐநா தலைமை அலுவலகங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடுபவர்களிடம் இங்கி லாந்து போலீசார் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாகவும்,பாலஸ்தீன ஆதரவாளர்கள் வெறுப்பு பேரணி நடத்து கிறார்கள் எனவும் இங்கிலாந்து உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் குற்றம் சாட்டியது பெரும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் அவரை இங்கி லாந்து பிரதமர் ரிஷி சுனக் பதவி நீக்கம் செய் துள்ளார்.
தெ.கொரிய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
தென் கொரியா அரசு நிறுவனமான சியோல் நகர மெட்ரோவில் 2,212 (13.5%) தொழிலாளர்களை 2026 ஆம் ஆண்டுக்குள் பணிநீக்கம் செய்ய திட்ட மிட்டுள்ளதை கண்டித்து எச்சரிக்கை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது போன்ற பணி நீக்கங்கள் ரயில் பயணத்தின் பாது காப்புத் தரங்களைப் பாதிக்கும் என தொழிற் சங்கங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
கார்பன் உமிழ்வை குறைக்கும் மின் உற்பத்தி திட்டம்
சீனாவின் ஷான்டாங்கில் உலகின் மிகப்பெரிய கடலோர சூரிய ஆற்றல் மின் உற்பத்தி ஆலையை சீனா கட்டத் தொடங்கியுள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி திட்டமாகும்.இந்த மின் உற்பத்தி ஆலை கட்டுமான பணி முடிவடைந்ததும் ஆண்டுதோறும் 1.78 பில்லியன் கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மற்றும் 1.44 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும்.
நாளொன்றுக்கு ஒரு பத்திரிகையாளர் கொலை
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கிய ஒரு மாதத்தில் குறைந்தது 39 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட தாக பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற் கான குழு தெரிவித்துள்ளது.எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு இந்த எண்ணிக்கை 41 என தெரிவித்துள்ளது. தற்போது ஒவ் வொரு நாளும் ஒரு பத்திரிகையாளர் காசா வில் கொல்லப்படுகிறார் என கூறப் பட்டுள்ளது.