*மரியபோல் நகரில் முற்றுகையிடப்பட்டுள்ள தமது படையினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட் டால் அல்லது ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடந்து உக்ரைனிலிருந்து பிரிந்தால் அமைதி பேச்சுவார்த்தைகளிலிருந்து உக்ரைன் விலகிக்கொள்ளும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
*வர்த்தக தடைகள் காரணமாக ரஷ்யாவின் சுகாய் விமானங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த விமானங்கள் பறக்க இயலாத சூழல் உருவாகும் எனவும் செய்திகள் கூறுகின்றன.
*நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால் புடின் “அணு ஆயுதம்” எனும் வார்த்தைகளையே பயன்படுத்த இயலாத அளவுக்கு மிரட்டிவைத்திருப்பேன் என டிரம்ப் பேசியுள்ளார்.
*ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேருவது சரியானது அல்ல என ஆஸ்திரியா கூறியது. இதுஉக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி யுள்ளது.
*ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் உக்ரைன் பாசிச அமைப்புகளுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் மறுபுறத்தில் உக்ரைனின் நாஜிக்களான “அசோவ் பட்டாலியன்” அமைப்பை ஆதரித்தும் பேரணிகள் நடைபெற்றன.
*உலகின் மிகப்பெரிய நிதியை கொண்டுள்ள நார்வேயின் “எண்ணெய் நிதி” வரலாற்றில் முதல்முறையாக 74 பில்லியன் டாலர்கள் ரூ.5,55,000 கோடி நட்டம் சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ரஷ்யா-உக்ரைன் போர்.
*உக்ரைனின் அசோவ் பட்டாலியன் வீரர் ஒருவர் டோன்பாஸ் பகுதியில் உள்ள ரஷ்ய மொழி பேசுபவர்களை கொல்ல வேண்டும் எனவும் அவர்களுடைய குழந்தைகளின் தலையை சீவ வேண்டும் எனவும் பேசிய காணொலி பெரும்
கோபத்தையும் பரபரப்பையும் உருவாக்கி யுள்ளது.
*வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு தினமும் மிரட்டல் தகவல்கள் வருகின்றன எனவும் தூதரக ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனவ் புகார் தெரிவித்துள்ளார்.
*தற்போது உள்ள தடைகள் போதாது எனவும் ரஷ்யாவை முற்றிலும் நசுக்கும் அளவுக்கு மேலும் தடைகள் தேவை எனவும் போலந்து வற்புறுத்தியுள்ளது.
*உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பிரிட்டனில் உள்ள பல சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில் சமையல் எண்ணெய் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு மிக குறைவான அளவே விற்கப்படுகிறது.