world

img

ஸ்தம்பித்தது பிரிட்டன் ரயில்வே தொழிலாளர்கள் ஆவேசப் போராட்டம்

லண்டன், ஜூன் 22- அதிகரித்து வரும் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தாததைக் கண்டித்து ஆயி ரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் பிரிட்டனின் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் பிரிட்டன் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ரயில்வே தொழிலா ளர்கள் இறங்கியிருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்றதொரு வேலை நிறுத்தத்தை பிரிட்டன் சந்தித்ததில்லை. கடைசி நிமிடம் வரையில் தொழிற் சங்கங்கள் பேசித் தீர்த்துக் கொள்வதற்குத் தயாராகவே இருந்தன. ஆனால் அரசுத் தரப்பில் அதற்கான வாய்ப்பை அளிக்காத தால், 72 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் இறங்கி விட்டார்கள். கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவைப் பின்பற்ற பல்வேறு பொருளாதாரத் தடைகளுக்கு பிரிட்டன் ஆதரவளித்தால் எரிபொருள் விலை அதி கரித்திருக்கிறது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் பணிப்பாது காப்பு குறித்த ரயில்வே தொழிலாளர்க ளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. சுரங்கப்பாதை ரயில் தொழிலா ளர்களும் முழுமையாகப் பங்கேற்று வருகிறார்கள். மாணவர்களின் தேர்வு பாதிக்கப்பட லாம் என்று போக்குவரத்துத் துறை செயலா ளர் கிரான்ட் ஷாப்ஸ் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை பிரதமர் மற்றும் ரயில்வே துறைகளின் காதுகளில் விழ வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் பதில் அளித்துள் ளன. 1989 ஆம் ஆண்டில் நடந்த பெரும்  வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு முதன்முறையாக நாடே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு தொழிலாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.  பரவும் போராட்டம் போராட்டத்தை அலட்சியப்படுத்திய தோடு, “நாடு முழுவதும் மக்களைப் பாதிப்பு க்கு உள்ளாக்குகிறார்கள்” என்று ரயில்வே தொழிலாளர்கள் மீது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.  ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மாதிரி ஊதியம் உயரவில்லை என்ப தைத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகி றார்கள். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்க ளும் வேலை நிறுத்தம் செய்யப் போகி றார்கள். வரும் வாரங்களில் போக்குவரத்து ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட் டோர் வேலை நிறுத்தத்தில் இறங்கு கின்றனர்.

பரவும் போராட்டம்

போராட்டத்தை அலட்சியப்படுத்திய தோடு, “நாடு முழுவதும் மக்களைப் பாதிப்பு க்கு உள்ளாக்குகிறார்கள்” என்று ரயில்வே தொழிலாளர்கள் மீது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.  ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மாதிரி ஊதியம் உயரவில்லை என்ப தைத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகி றார்கள். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்க ளும் வேலை நிறுத்தம் செய்யப் போகி றார்கள். வரும் வாரங்களில் போக்குவரத்து ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட் டோர் வேலை நிறுத்தத்தில் இறங்கு கின்றனர்.