ஹிரோஷிமா,ஆக.6- இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ‘லிட்டில் பாய்’ எனும் அணு குண்டை அமெரிக்கா வீசி,பேரழிவை உண்டாக்கியது. இதற்கடுத்து மூன்று நாள் கழித்து நாகசாகியில் ‘ஃபேட் மேன்’ அணுகுண்டை வீசியது அமெரிக்கா. ஹிரோ ஷிமாவில் 1.40 லட்சம் மக்கள் பலியாகினர். ஹிரோஷிமா நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘78 ஆண்டு களுக்கு முன்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. அந்த வலி என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஹிரோஷிமா மக்களின் பக்கம் நான் நிற்கிறேன். அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அயராது உழைக்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.