world

img

கிரெனடாவிலும் இடதுசாரிகள் வெற்றிக்கொடி

செயின்ட் ஜார்ஜ், ஜூன் 27- மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கிரெனடாவில் இடதுசாரிக் கட்சியான தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று கட்சியின் தலைவரான டிக்கன் மிட்செல் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை யின் புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் ஜூன் 23-ஆம் தேதியன்று நடைபெற்றது. மொத்த முள்ள 15 இடங்களில் 9 இடங்களில் தேசிய  ஜனநாயகக் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக் கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த புதிய தேசியக் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

44 வயதாகும் டிக்கன் மிட்செல் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு பொறுப் பேற்றுக் கொண்டார்.  இதுதொடர்பாக கிரெனடா மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், ‘‘இது எங்களு டைய வெற்றியல்ல... உங்களுடைய வெற்றி. ஒன்றுபட்டு கிரெனடாவை முன்னெடுத்துச் செல்வோம்’’ என்று கூறியுள்ளார்.  மருத்துவ நலன் மேம்பாடு, வறுமையை யும், வேலையின்மையையும் குறைத்தல், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவான வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம் என்று உறுதி கூறியிருக்கிறார். கியூபா, வெனிசுலா, செயிண்ட் லூசியா,  செயிண்ட் வின்செண்ட், டொமினிசியா மற்றும் பார்படாஸ் ஆகிய நாடுகளின் தலை வர்கள் டிக்கன் மிட்செலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.