நைரோபி, மே 7- தங்கள் நாட்டின் வடபகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவு வதால் அப்பகுதியில் இரவுநேர ஊரடங்கை கென்யா நடை முறைப்படுத்தி உள்ளது. வடபகுதியில் உள்ள குழுக்களிட மிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் பணியும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கிறது. கென்யாவுக்கும், எத்தியோப்பி யாவுக்கும் இடையில் உள்ள எல்லை நகரங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டவிரோத ஆயுதங்கள் முழுமை யாகப் பறிமுதல் செய்யப்படும்வரையில் இந்த ஊரடங்கு தொடரும். சில தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ளவர்களை ஆயுதபாணியாக்குகிறார்கள் என்று கென்யாவின் உள்துறை செயலாளர் பிரெட் மட்டியாங்கி தெரிவித்துள்ளார்.