கேப்டவுன் (தென்னாப்பிரிக்கா), ஜன.2- தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணியளவில் நடந்துள்ளது, தீப்பிழம்பு களும், புகை மண்டலமுமாக அப்பகுதி காட்சியளித்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அலுவலகங்களில் அதிகாலை பற்றிய தீ, தேசிய சட்டமன்ற கூட்டம் நடைபெறும் அறைக்கும் பரவிய தாக கேப் டவுன் நகர தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெர்மை ன் கேரல்ஸ் தெரிவித்தார். இந்த விபத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்ற வளாகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.