world

img

ஸ்பெயின் : மன இறுக்கத்தைப் போக்க க்ரையிங் ரூம் அறிமுகம் 

ஸ்பெயின்ல் பொது மக்களின் உளவியல் ரீதியிலான பிரச்சினைகளைப் போக்க க்ரையிங் ரூம் முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

செயற்கை முறை வாழ்க்கையால் மக்கள் அதிக மன அழுத்தம், இறுக்கம், சோர்வு மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேட்ரிட் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அழுகை அறைக்கு மக்கள் வருகைதந்து, தாங்கள் யாரிடம் மனம்விட்டு அழவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை அலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசலாம் அல்லது உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றைக் கொட்டி தீர்க்கலாம். மனம் விட்டுப்பேச ஆள் இல்லையே என்ற ஏக்கம் மக்களை உளவியல் ரீதியாகப் பாதிப்பதால் உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை அறிமுகம் செய்துள்ளனர். இதனால், மன இறுக்கம் உள்ளிட்ட உளவியில்நீதியிலான பிரச்சினைகள் குறைவதாக மனநல நிபுணர்கர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்பெயினில் 10இல் ஒருவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மக்களின் மன நலனைப் பாதுகாக்கவே ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.

;