காங்கோ தேசிய இயக்கத்தின் தலைவர் பேட்ரிஸ் லுமும்பா. 19 ஆம் நூற்றாண்டு இறுதி யில் பெல்ஜியம் ராஜா இரண்டாம் லியோ பால்டு என்பவரின் கீழ் காலனி நாடாக காங்கோ இருந் தது. 1885 லிருந்து 1908 வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட காங்கோ மக்கள் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்கா கண்டம் முழு வதும் காலனி ஆதிக்கத்திலி ருந்து விடுதலை பெற உறுதியாக பாடுபட்டவர் பேட்ரிஸ் லுமும்பா. 1958 இல் புதிதாக விடுதலை யான கானா நாட்டில் நடை பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்களின் மாநாட்டில் பங்கேற் றார். 1960- இல் காங்கோ பெல்ஜி யத்திடமிருந்து விடுதலை பெற்ற பிறகு 1960 ஜூன் மாதம் லுமும்பா உரக்க கூறினார். ‘ஆப்பிரிக்க கண்டம் முழுமையும் விடுவிப்ப தில் முதல் தீர்மானகரமான நட வடிக்கை காங்கோ விடுதலை.’
காங்கோ நாட்டு இயற்கை வளங்களை காங்கோ மக்களின் நலன்களுக்காக பயன்படுத்து வதில் உறுதியாக இருந்தார் லுமும்பா. காங்கோ நாட்டு பொரு ளாதாரம் மீது ஆதிக்கம் மற்றும் அதன் வளங்கள் மீது அமெரிக்கா விற்கும் பெல்ஜியத்திற்கும் நோட்டம் இருந்தது. லுமும்பாவின் ஆவேச உரைக்கு சில வாரங்களுக்கு பின்னர் அப்போதைய அமெ ரிக்க ஜனாதிபதி ஐசனோவர், தேச பாதுகாப்பு கவுன்சில் கூட்டத் தில் காங்கோ தலைவரை தீர்த்துக் கட்ட வேண்டும் எனக் கூறினார். லுமும்பா பதவியேற்ற சில மாதங்களிலேயே அவரது ஆட்சி பெல்ஜியம் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட எதிர் புரட்சி சக்திகளால் கவிழ்க்கப் பட்டது. 35 வயதிலேயே லுமும்பா கைது செய்யப்பட்டு, சித்ரவதை களுக்கு உள்ளாக்கப்பட்டு, 1961 ஜனவரி 17- ல் மிருகத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இங்கி லாந்தின் உளவுப் பிரிவும் இதற்கு துணை போனது. மேற்கத்திய நாடுகள், மொபுட்டோ சேஷே சேக்கோ என்பவர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சியை காங்கோ வில் நிறுவின. அது 30 ஆண்டுகள் நீடித்தது. அவரது ஆட்சியில் கடும் அடக்குமுறை நிலவியது டன் இயற்கை வளங்களை பன் னாட்டு கம்பெனிகள் சூறையாடின.
லுமும்பா மற்றும் அவரது சக தோழர்கள் ஜோசப் ஓகிட்டோ, மௌரிஸ் போலோ ஆகி யோரும் சுட்டுக் கொல்லப்பட்ட னர். இரண்டு நாட்கள் கழித்து, பெல்ஜிய நாட்டின் போலீஸ் கமி ஷனர் லுமும்பாவின் சவத்தை தோண்டி எடுத்து சவத்தை பல கூறுகளாக வெட்டி அமிலத்தில் கரைத்தார். அவரது நினைவு, தியாகம் போற்றப்படக்கூடாது என்பதற்காக இந்த பயங்கரம். 1999-இல் அந்த போலீஸ் கமி ஷனர் லுமும்பாவின் இரண்டு பற்களை திருடி வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார். வேட்டைக்கு கிடைத்த பரிசாம் இது. கமிஷனர் இறந்த பிறகு அவரது மகள் வசம் லுமும்பாவின் தங்கப்பல் இருந் தது 2016ல் கண்டுபிடிக்கப்பட் டது. இந்த உண்மை வெளியான வுடன் காங்கோ நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. லுமும்பாவின் குடும்பத்தினர் பெல்ஜியம் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பெல்ஜியம் அதி காரிகள் தங்க பல்லை கைப்பற்றி னர். 2020 செப்டம்பரில் பெல்ஜி யம் நீதிபதி, தங்கப்பல்லை லுமும்பாவின் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்த ரவிட்டார். தங்கப்பல் லுமும்பாவின் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தது. ஆனால் லுமும்பா படுகொலை குறித்து எவ்வித விசாரணையும் இல்லை; நீதி நிலை நாட்டப்படவுமில்லை. 2022 ஜூன் 27 முதல் 30 வரை தேசம் தழுவிய அஞ்சலி செலுத் தப்பட்டுள்ளது. பேட்ரிஸ் லுமும்பா தங்கப்பல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பேட்ரிக்ஸ் லுமும்பாவை ஆப்பிரிக்க மக்க ளும் உலக மக்களும் என்றென் றும் நினைவில் வைத்திருப்போம்.