world

img

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் விழுந்து விபத்து - 29 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சில், 92 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மீட்கப்பட்டனர். பிலிப்பைன்சின் தென் பகுதியில், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளதால், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியிக்காக அப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில், 92 பேருடன் சென்ற அந்த ராணுவ விமானம் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 40 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா, ஜோலோ தீவுப்பகுதியில் 85 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போதே விபத்துள்ளானதாக தெரிவித்துள்ளார்.

;