லிபியா வெள்ளம்: 5,200க்கும் மேற்பட்டோர் மரணம்
கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட டேனியல் புயல் காரணமாக இரண்டு அணைகள் உடைந்ததில் இதுவரை 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற் பட்டோரை காணவில்லை என அந்நாட்டின் உயர் மட்ட அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் இங்கிலாந்து மருத்துவர்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை பணியில் உள்ள பெண் அறுவை சிகிச்சை நிபுணர்களில் மூன்றில் ஒருவர் தனது சக மருத்துவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக ஜர்னல் ஆஃப் சர்ஜரி நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.
சீனாவில் புயலைத் தொடர்ந்து நிலச்சரிவுகள்
தெற்கு சீனாவில் ஏற்பட்ட ஹைக்கு புயல், பின்னர் வெப்ப மண்டல புயலாக தாழ்ந்தது. இந்த புயலால் பெய்த தொடர் மழையால் பல நூறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
ராணுவத்தில் இணையும் ரஷ்ய இளைஞர்கள்
ராணுவத்தில் இணைய தினமும் 1000-1500 இளைஞர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றும் கடந்த 6-7 மாதங்களில் 2,70,000 இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் இணைய கையெழுத்திட்டதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார்.
ஐபோன் விற்பனைக்கு பிரான்ஸ் தடை
அதிக கதிர்வீச்சு வெளியிடுவதன் காரணமாக ஐபோன் -12 ரக கைப்பேசிகளின் விற்பனையை பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.அந்நாட்டு கதிர் வீச்சு கண்காணிப்பு அமைப்பின் சட்ட பூர்வ அனுமதியை விட அதிகளவு கதிவீச்சு கண்டறியப்பதால் இந்த தடையை மேற்கொண்டதாக பிரான்ஸ் கூறியுள்ளது.