பாலஸ்தீனர் சொத்துக்களை திருடும் இஸ்ரேல்
பாலஸ்தீனர்கள் வசித்து வந்த நிலங்களையும் அவர்களது சொத்துக்களையும் இஸ்ரேல் திருடியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்கள் மீது அடக்கு முறையை ஏவுவதோடு அவர்களின் வீடுகளை யும், விவசாய நிலங்களையும், சொத்துக்களை யும் திருடி அங்கு இஸ்ரேல் மக்களை குடியமர்த்து கிறது. இந்நிலையில் அப்பகுதியில் 652 ஏக்கர் நிலங்களை திருடி அங்கு யூதர்களை குடியமர்த் தும் வேலையில் ஈடுபட்டுள்ளது இஸ்ரேல்.
இங்கிலாந்து கப்பல்கள் மீது தாக்குதல் தொடரும்
இங்கிலாந்து கப்பல்கள் மீதான தாக்கு தலை தொடர்வோம் என ஹவுதி அறிவித்துள்ளது. பாலஸ்தீன இனப்படு கொலைக்கு ஆதரவான நாடுகளின் கப்பல் கள் மீது செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் (ரூப்யமர்) ஒன்று முதல் முறையாக மூழ்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய, சீன கப்பல்களை தாக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
கனடா உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
உயர் கல்விக்காக கனடா செல்ல விண்ணப்பிக்கும் இந்திய மாண வர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வீழ்ச்சிய டைந்துள்ளது. இரு தரப்பு உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் கனடாவில் உருவாகியுள்ள வீடு வாடகை நெருக்கடிகளின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள் ளது. 2023 ஆம் ஆண்டு உயர் கல்விக்காக 3,63,484 இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு 3,07,603 ஆகக் குறைந்துள்ளது.
ஹைதியில் தேசிய அவசர நிலை அறிவிப்பு
ஹைதி அரசாங்கம் 72 மணி நேர தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது. ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அங்குள்ள மிகப்பெரிய சிறைச் சாலையாக உள்ள போர்ட்-ஆப்-பிரின்ஸ் சிறைச்சாலையைத் தாக்கியது. இந்த தாக்குத லில் 12 பேர் படுகொலையாகியுள்ளனர். அது மட்டுமின்றி இத்தாக்குதல் 4,000 கைதிகள் தப்பி யோட வழி வகுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில் நிலைமையை கட்டுப்படுத்த அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் பரவும் காலரா 299 பேர் மரணம்
சூடானில் பரவும் காலரா குறித்து உலக சுகாதார அமைப்பு வெளி யிட்ட அறிக்கையில் 299 பேர் உயிரிழந்துள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சூடானில் பரவி வரும் கால ராவால் 10 ஆயிரத்து 800 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நட வடிக்கைக்காக தடுப்பூசி வழங்குவதோடு மருத் துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகர ணங்கள் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை யும் உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.