நியூயார்க், அக்.25- ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் தங்கள் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட் களைத் தர விரும்பினால் 2030 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை 70 விழுக்காடு அதிகப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை எச்சரிக்கிறது. இது குறித்து ஐ.நா. சபை தயாரித்துள்ள அறிக்கையில், “உணவு உற்பத்தியில் இந்த அளவுக்கு அதிகரிப்பு இல்லையென்றால் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான உணவுப் பாது காப்பின்மையில் மக்கள் சிக்கித் தவிப்பார்கள்.தற்போது 130 கோடி மக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வசிக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டு களில் இந்த எண்ணிக்கை 250 கோடியைத் தொட்டுவிடும். உணவுக்காகக் காத்திருப் பவர்களின் எண்ணிக்கையையும் இது பெரு மளவில் அதிகரித்துவிடும்” என்று கூறப் பட்டுள்ளது. பயிர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்தாலே பாதிப்பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்று கானா நாட்டின் உணவு மற்றும் விவசாயத்துறையின் இயக்குநரான பாட்ரிக் ராபர்ட் அன்கோபியா கூறுகிறார். இது பற்றிக் கருத்துக்கூறிய அவர், “பூச்சிகளால்தான் 40 விழுக்காடு உணவுப் பயிர்கள் பாழாகின்றன. இத னால் சிறு விவசாயிகள் அழிவைக் கொண்டு வரும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்து கிறார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் விவசாய உற்பத்தித் தொடர முடியாமல் போய் விடுகிறது” என்கிறார்.
மேலும் பேசிய அவர், “சுற்றுச்சூழல் மோச மாதல், பூச்சிகளின் தாக்கம் அதிகமாதல் மற்றும் இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருத்தல் ஆகிய பிரச்சனைகளால் விவசாய உற்பத்தியில் கடுமையான சரிவு இருக்கும். இந்தப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்படும் எந்தத் திட்டமும் வரவேற்கப்படும்” என்கிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நட வடிக்கைகளை எடுக்கத் தனியாக பிளானட்வைஸ் பிளஸ் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து செயல்படவிருக்கும் இந்த அமைப்பு உலக அளவில் தனது செயல்பாடுகளைக் கொண்டி ருக்கிறது. தற்போதையப் புதிய திட்டத்தில் கானா, கென்யா, பாகிஸ்தான், ஜாம்பியா, வங்க தேசம் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படவிருக்கின்றன. பயிர்களைப் பாதுகாப்பது மற்றும் அதற்கான நிர்வாகக் கட்ட மைப்பை உருவாக்குவது பற்றி இந்த நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் இதற்கு ஆதரவளிக்கப் போகிறது.
பெண்கள் பங்கேற்பு
ஆப்பிரிக்கக் கண்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் பெண்களின் பங்கேற்பு அவசியம் என்று பிளானட்வைஸ் பிளஸ் அடையாளம் கண்டுள்ளது. புதிய திட்டத்தில் இணையும் நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பெண் விவ சாயிகளை அடையாளங்கண்டு, பயிர்களைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்களிப்பை விளக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய விருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் உள்ள நிலைமை பற்றி கடந்த மாதத்தில் ஒரு ஆய்வறிகையி வெளியாகி யிருந்தது. இந்த ஆய்வை பிரிட்டனின் செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டது. இந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களில் 14 கோடியே 60 லட்சம் மக்கள் கடுமை யான பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு இயங்கினால்தான் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.