பெய்ஜிங், பிப். 21- 24ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா 20ஆம் நாள் இரவு சீனத் தேசிய விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ஜி ஜின்பிங், லிகே கியாங் உள்ளிட்ட சீன தலைவர்கள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
முதலாவது நகர்
2008ஆம் ஆண்டில் கோடைக் கால ஒலிம்பிக்கையும் 2022ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக்கை யும் நடத்தி வரலாற்றில் இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதலாவது நகர் என்ற சாதனை யைப் பெய்ஜிங் படைத்துள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் 91நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3000 விளையாட்டு வீரர்கள் பங்கேற் றனர். இப்போட்டியில் 2 உலகச் சாதனைகளும் 17 ஒலிம்பிக் சாதனைகளும் படைக்கப்பட்டன.
மேலும், மேலும்...
மேலும் விரைவு, மேலும் உயர்வு, மேலும் வலிமை மற்றும் மேலும் ஒற்றுமை என்ற ஒலிம்பிக் எழுச்சியை அவர்கள் உருவாக்கினார்கள். கோவிட்-19 தொற்று பாதிப்பைச் சமாளித்து எளிமை, பாதுகாப்பு மற்றும் அற்புதமான குளிர்கால ஒலிம்பிக் நடத்துவதற்குச் சீனா மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டுள் ளது. தரமான விளையாட்டு அரங்கு களின் உபகரணங்கள், சிறந்த அமைப்பு மற்றும் சேவைப் பணி கள் ஆகியவற்றின் மூலம், ஒலிம்பிக் குடும்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் பரந்த பாராட்டுக்களைச் சீனா வென்றுள் ளது. நடப்பு குளிர்கால ஒலிம்பிக் தனிச்சிறப்பு மிக்கதாக இருந்தது. ஒலிம்பிக் அமைப்புப் பணி சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது என்று நிறைவு விழாவில் பாக் உரைநிகழ்த்திய போது தெரி வித்தார். 24ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவு பெறுவதை அறிவித்த பாக் இத்தாலியில் நடைபெறும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக்கில் உலக இளைஞர்கள் மிலன் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.