பியூனஸ் அயர்ஸ், டிச.27- நிறுவனங்கள் தங்கள் விருப் பத்துக்குத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கான தடையை நீட்டிக்கும் அறிவிப்பை அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் வெளியிட்டுள்ளார். முந்தைய வலதுசாரி அரசின் கொள்கைகளால் வேலையின்னை கடுமையான உயர்ந்திருந்தது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கு வது என்ற அம்சம் ஒருபுறமிருக்க, வேலைகளை இழப்பதுதான் மிகப் பெரிய நெருக்கடியாக அர்ஜெண்டி னாவில் இருந்தது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வந்தனர்.
நிறுவனங்க ளின் தரப்பில் ஏராளமான கார ணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலும் பொய் யான, நியாயமற்ற காரணங்களா கவே இருந்தன. இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆல் பெர்ட்டோ பெர்னாண்டஸ், வேலை யிழப்புகளைத் தடுக்க முனைந்தார். வேலையிலிருந்து தொழிலாளியை வெளியேற்றத் தடை விதித்து அர சாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளால் அர்ஜெண்டினா வில் வேலையின்மை விகிதம் குறை ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 11.7 விழுக்காடாக இருந்த வேலை யின்மை விகிதம், 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 8.2 ஆக குறைந்துள்ளது.
நியாயமற்ற காரணங்களுக்காக வேலையிலிருந்து தொழிலாளியை விலக்கும் நடவடிக்கைக்கு ஜூன் 30, 2022 வரையில் தடை விதிக்கப் பட்டுள்ளது. பொருத்தமான கார ணங்கள் இருந்தாலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எவ்வ ளவு இழப்பீடு என்பதையும் அரசு நிர்ணயித்துள்ளது. நியாயமற்ற கார ணங்களால் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை யான இழப்பீடோடு, கூடுதல் இழப்பீ டும் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுபோன்ற பல்வேறு நட வடிக்கைகளால் கோவிட் 19 தொற் றுக்கு முன்பாக இருந்த வேலை யின்மையை விட தற்போது குறைவா கவே உள்ளது. 2019 ஆம் ஆண்டில் 9.8 விழுக்காடும், 2018ல் 9.2 விழுக் காடும், 2017ல் 8.4 விழுக்காடு என்ற அளவில் வேலையின்மை இருந்தது என்று அர்ஜெண்டினாவின் தேசிய புள்ளிவிபர மையம் தெரிவித்துள் ளது. வேலையிழப்புகள் நின்ற தோடு, புதியதாக ஆயிரக்கணக் கான வேலைகள் உருவாக்கப்பட் டுள்ளன என்று அந்த மையம் கூறி யிருக்கிறது.