பெய்ஜிங், ஏப்.18- சீனாவின் சர்வதேச கடல் எல்லைக்கருகில் தனது போர்க் கப்பலைச் செலுத்தி, அப்பகுதி யில் பதற்றத்தைத் தூண்டும் வகையில் அமெ ரிக்கா செயல்பட்டுள்ளது. தைவான் நீரிணைக்குள் அமெரிக்கக் கப்பற் படையின் யு.எஸ்.எஸ்.மிலியஸ் என்ற போர்க் கப்பல் உலாவியிருக்கிறது. சர்வதேசக் கடற்பகு தியில் கப்பல்களை செலுத்திக் கொள்ளும் சுதந்தி ரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை களில் ஒன்றாக இதைத் தாங்கள் செய்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது. எங்கெல்லாம் பதற்றங்களைத் தூண்ட வேண்டுமோ அந்தப் பகுதிகளில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் இறக்கி விடப்படுகின்றன. சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தைவா னைத் தூண்டிவிட்டு வருகிறது. “ஒரே சீனம்” என்பதை உலகம் முழுவதுமுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன. தைவான் என்பது சீனாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று சீனா மட்டுமல்ல, சர்வதேச அள வில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தைவானை நிர்வகித்து வரும் டிசாய் இங் வென், அமெ ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டார். அவரது பயணத்தை அரசு ரீதியான பயணம் என்று சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அத்தகைய பயணம் என்ற முத்தி ரையைக் குத்துவதற்கான அமெரிக்க நாடாளு மன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர், சந்திப்புக் கான ஏற்பாடுகளைச் செய்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
இதனால், சீனாவின் கடற்பகுதி மற்றும் தைவானைச் சுற்றியுள்ள தனது பகுதிகளில் சீனா பயிற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவின் சட்டவிரோத செயல்பாட்டிற்கும், டிசாய் இங் வென்னின் பயணத்திற்கும் எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் இது நடத்தப்பட்டது. இந்நிலை யில், பயிற்சி நடந்த இடங்களுக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மிலியஸ் அனுப்பப்பட்டது. தீர்வு காணப்படாமல் உள்ள எல்லைப்பகுதிக்குள் அமெரிக்கக் கப்பல் சட்டவிரோதமாக நுழைந்திருக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதி சுதந்திரமான பகுதி யாக இருப்பதை உறுதிப்படுத்தவே இந்த போர்க்கப்பல் பயணம் என்று அமெரிக்கா கூறியி ருக்கிறது. மார்ச் மாதத்தில் சீனாவின் எல்லைக் குள் இந்தப் போர்க்கப்பல் நுழைந்தது. அப்போது சீனப் படையினர் எச்சரித்ததால், திரும்பிச் சென்று விட்டது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடக்க வில்லை என்று அமெரிக்கா சொல்லிக் கொண் டது. ஆனால், தீர்வு காணப்படாத எல்லைப் பகுதிக்குள் நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வேலையில் அமெரிக்கா தற்போது இறங்கி யுள்ளது. இத்தகைய அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதை சீனா கடுமையாகக் கண்டித் துள்ளது.
பொருளாதாரம் பாதிப்பு
அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற நெருக்கடியான நிலைமை, பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிடும் என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே எச்சரித்துள்ளார். பிற நாடுகள் மீது அரசியல் ரீதியாக அழுத்தம் போடப்படுகிறது என்று கூறிய அவர், “இத்தகைய அழுத்தம் எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இரு நாடுகளுக்கிடையில் நடக்கும் போட்டியில் மற்ற நாடுகள் பாதிக்கப்படக்கூடாது” என்றார். இவருடைய பேச்சு பற்றிக் கருத்து தெரிவித்துள்ள சில பொருளாதார நிபுணர்கள், அமெரிக்காதான் பிற நாடுகளைத் தள்ளி வைக்கும் போக்கைக் கடைப்பிடிக்கிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வர்த்தகத்தை மோதல் போக்குள்ளதாக இல்லா மல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோ சனை கூறி அவர், அவ்வாறு செய்யப்படாவிட்டால், குறைந்த பொருளாதார வளர்ச்சி, குறைவான செல்வம் மற்றும் அதிகமான வறுமை ஆகிய வற்றை நோக்கி நாம் தள்ளப்படுவோம் என்று எச்ச ரிக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அரசியல்வாதியான லகார்டே, 2011 ஆம் ஆண்டு முதல் 2019 வரையில் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.