world

img

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 11 பேர் சுட்டுக்கொலை....

நேபிடாவ்:
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். 

மியான்மரில் வடமேற்கு பகுதியில் ராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இதில் போராட்டக்காரர்கள் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதில் ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்ததேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிஅமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க மறுத்த ராணுவம்,  ஆட்சியைக்கவிழ்த்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.ஆங் சான் சூகி,  மியான்மரின் அதிபர்யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம்வைத்தது. அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களை மியான்மர் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

;