world

img

15 லட்சம் மாடுகள் இறப்பு

15 லட்சம் மாடுகள் இறப்பு அடிஸ் அபாபா, ஜூலை 13- எத்தியோப்பியாவில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளாக எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய நாடுகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மழைக்காலத்தில் மழையே இல்லாமல் போனதால் இந்த நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.  இடப்பெயர்ச்சிக்கான சர்வதேச அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, எத்தியோப்பியாவின் பல பகுதிகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. இங்கு பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சியால் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பை இழந்திருக்கிறார்கள். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதி யிலிருந்து தண்ணீர், மேய்ச்சல் நிலம் மற்றும் உதவி நாடி வெளியேறியிருக்கிறார்கள்.