world

img

விவசாயிகள் பிரச்சனைக்குத் தீர்வுகாணுமாறு மோடியுடன் பேசுங்கள்... பிரிட்டன் பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்....

லண்டன்:
தில்லியின் எல்லையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திடுமாறும், அங்கே போராடும் விவசாயிகள் மீது கொடூரமான ஒடுக்குறை மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்திடுமாறும் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

ஐந்தாம் தேதியிட்டு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், அமைதியான முறையில் போராடிவரும் விவசாயிகள் மீது நரேந்திர மோடி அரசு, குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியதையும், கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவியதையும் குறிப்பிட்டுள்ளனர். போரிஸ் ஜான்சன், குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வர இருந்தார். ஆனால், தன்நாட்டில் கோவிட்-19 நெருக்கடி மீண்டும் அதிகரித்துள்ளதால் அவர் தன் பயணத்தைரத்து செய்துவிட்டார்.எனினும், இரு பிரதமர்களும் விரைவில் சந்தித்துப்பேச இருப்பதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.  அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், போராடும் இந்திய விவசாயிகளின் பிரச்சனையின் அவசரமுக்கியத்துவத்தைக் கணக்கில்எடுத்துக்கொண்டு, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றுதாங்கள் வலியுறுத்த வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளனர். பிரிட்டன் நாடாளு மன்றத்தின் ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ உறுப்பினர்களுடன், பிரபுக்கள் சபை (ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்)யின் உறுப்பினர்கள் சிலரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். (ந.நி.)

;