world

img

பணவீக்கம் உயர்வு : துயரத்தில் ஐரோப்பிய நாடுகள்

வீட்டு வாடகை மற்றும் பணவீக்க உயர்வு, முற்றும் வேலை நெருக்கடி உள்ளிட்டவற்றால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தப் பிரச்சனைகளால் தங்கள் அரசுகளுக்கு எதிராக வீதிகளில் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். பிரிட்டனின் அரசுத்துறையைச் சேர்ந்த தேசிய புள்ளிவிபர அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. உற்பத்தியும் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதால், வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது. வேலைக்காகப் பதிவு செய்து காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் 3.8 விழுக்காடாக உள்ளது. இது போலவே மற்ற ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன.