world

img

கடும் பஞ்சத்தில் எத்தியோப்பியா....

ஜெனீவா:
உள்நாட்டு போரால்   எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கி தவிப்பதாக  ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள் ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் நிவாரணப் பணிகள் பிரிவு இடைக்காலத் தலைவா் ரமேஷ் ராஜசிங்கம் கூறுகையில், எத்தியோப்பியாவில் மோதல் நடைபெற்று வரும் டிக்ரே மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உணவுப் பற்றாக்குறையும் பட்டினியும் அபாய அளவைக் கடந்துள்ளது. கடுமையான பஞ்சத்தைச் சந்தித்து வருவோரின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்தப் பகுதிக்கு நிவாரணப் பொருள்களை நாம் கொண்டு செல்ல வேண்டி யது மிகவும் அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.

;