ஆப்ரிக்க நாடுகளில் கொரொனாவை விட மிகவும் வேகமாக மார்பர்க் எனும் வைரஸ் பரவி வருகிறது. இதனால் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் மீனவர் ஒருவருக்கு மார்பர்க் வைரஸ் இருப்பது கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கினியா நாட்டிற்கு இந்த நோய் பரவியது.
இந்த வைரஸுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேருக்கு நோய் அறிகுறி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த மார்பர்க் வைரஸானது எபோலா வகையை சார்ந்தது ஆகும்.
இது பழந்தின்னி வெளவால்கள் மூலமாக வரவுவதாகவும் அதன்மூலம் வெளவால்களுக்கு எவ்வித பாதிப்பும் எல்லை எனவும் கூறப்படுகிறது.
கடுமையான தலைவலி, காய்ச்சை, உள் உறுப்புகள் மற்றும் உடலின் வெளிப்பகுதிகளில் ரத்தக்கசிவு ஆகியவை இந்த மார்பர்க் வைரஸின் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் இந்த சூழலில் இந்த வைரஸ் எபோலா வைரஸை போல 88% உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மார்பர்க் வைரஸானது நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் , வெட்டுகாயம், எச்சில் , ரத்தம் ஆகியவற்றின் மூலம் பரவும் எனவும் நோய் பாதிக்கப்பட்டவர் தனிமைபடுத்தி கொள்ளவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மார்பர்க் வைரஸுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. எனவே முதற்கட்ட சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மார்பர்க் வைரஸையும் கொரோனாவை போல ஆர்டி பிசிஆர் மூலம் மட்டுமே கண்டறிய முடியும் எனவே சோதனை மைய்யங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது எனவும் உலக சுகாதார நிறுவனம் தகவல்.