world

img

கினியா ராணுவ கிடங்கில் வெடிப்பு விபத்து  - 20 பேர் பலி

கினியா நாட்டில் ராணுவ கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர்  உயிரிழந்துள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கினியாவில் பட்டா என்ற நகரத்தில் ராணுவ வெடிபொருள் கிடங்கு செயல்பட்டு வந்தது. நேற்று மாலை கிடங்கில் உள்ள வெடி பொருள்கள் வெடிக்க தொடங்கியுள்ளது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வெடி பொருள்களும் வெடித்து சிதறின. இதனால் அருகே உள்ள வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் பலர் பலத்த காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து, வெடிவிபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்துள்ள 500க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
விபத்து குறித்து கினியா நாட்டின் அதிபர் டியோடோரா ஓபியாங் கூறியதாவது                                                  வெடிபொருளை கவனக்குறைவாக கையாண்டதால் இந்த வெடி விபத்து நேரிட்டதாகவும், , ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

;