world

img

ஆப்கானிஸ்தானை உலுக்கும் நிலநடுக்கங்கள் மூன்றாவது முறையாக 6.3 ரிக்டர் அளவில் அதிர்வு

காபூல்,அக்,15- ஆப்கானிஸ்தானின்  ஹெராத்  பகுதியில் 30 கி.மீ தொலைவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கங் களின் பாதிப்புகளில் இருந்து  இன்னும் மீளாத ஆப்கானிஸ் தானுக்கு இது மேலும் மிகப் பெரிய பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது.  அக்டோபர்  7 அன்று ஆப்கானிஸ் தானின் ஹெராத் நகரில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 12 கிராமங்கள் முற்றிலும் சிதைந்து போய் விட்டன. அதனை தொடர்ந்து அக்டோபர் 11  புதன் கிழமை அன்று அதிகாலை மீண்டும் அதே பகுதியில்  6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற் பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு  நகரத்தை சுற்றி பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு தரை மட்டமாகியது.சஹாக் என்ற கிராமத்தில் 700 கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.  நிலநடுக்க அதிர்வுகளால் பல நூறு வீடுகள் இடிந்ததில் பெண்கள், குழந்தை கள் உட்பட 20,000 க்கும் மேற்பட்ட  நபர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறு வனம் தெரிவித்துள்ளது.புவியியல் அமைப்பின் படி  ஹெராத் பகுதி  மாலை நேரத்தில் கடுங்குளிர் நிலவும் பகுதியாகும், குளிர்காலம் துவங்க உள்ள நிலையில் வீடுகளை இழந்த மக்களின் வாழ்க்கை  மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.