உக்ரேன் நெருக்கடியைக் காரணம் காட்டி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்ற அமெரிக்கக் கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான பியூ கிராஸ்கப் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை உக்ரைன் நெருக்கடியைக் காட்டி அதை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் எண்ணெய்க்கான தேவை குறைந்ததால் வியாபாரம் குறைந்தது. தற்போது உக்ரைன நெருக்கடியால் மீண்டும் தேவை குறைகிறது. அதிக விலைக்கு எண்ணெய் விற்று ஈடுகட்ட அமெரிக்க நிறுவனஙகள் முடிவு செய்துள்ளன" என்றார்.
இதனால் அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தங்கள் நிலைமை மோசமாகியிருக்கிறது என்று அமெரிக்க மக்கள் நினைக்கிறார்கள் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.