world

img

அமெரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா!  

அமெரிக்காவில் பரவும் புதிய வகை நோய்த்தொற்றால் எச்சரிக்கையாக இருக்க, பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.  

அமெரிக்காவில் ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது ஓமிக்ரான் வகையை சேர்ந்தது என்றும் இதற்கு முந்தைய தொற்றுகளை விட வீரியம் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், அமெரிக்க மக்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன், பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது.  

இது புதிய வகை கொரோனா பரவலை பிரதிபலிக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி கடுமையான பாதிப்புக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர்.ரோசெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

;