world

img

வாக்னர் படையை இணைக்க புடின் உத்தரவு; லிபியாவில் காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் நேட்டோ கூட்ட மைப்பு ராணுவத்தால் 2011 ஆம் ஆண்டு கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லிபியாவில்  இரு போட்டி அரசாங்கங்கள்  உரு வாக்கப்பட்டன.  டோப்ருவை தலைநகராக கொண்ட கிழக்கு லிபிய தளபதி ஹப்தர் கடந்த செப்டம்பர் 26 அன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி புடின், துணை ராணுவ அமைச்சர் எவ்குரோ மற்றும் ராணுவ தலைவர்களுடன்  சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு எதார்த்தமான நிகழ்வு அல்ல என கூறப்படுகிறது.  ஹப்தரின் ரஷ்ய பயணத்திற்கு 5 நாட்களு க்கு முன்பு அமெரிக்க-ஆப்பிரிக்க (AFRICOM) கூட்டுப்  படைத்தளபதி மைக்கேல், லிபியாவிற் கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் நோர்லாண்ட் உடன் பேரிடரில் பாதிக்கப்பட்ட லிபியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமெரிக்காவின் மனிதநேய உதவிகளை பார்வையிடுவதாக பெங்காசிக்கு விஜயம் செய்து தளபதி ஹப்தரை சந்தித்தனர்.இந்த சந்திப்பின் போது அமெரிக்காவிற்கு தடையாக உள்ள வாக்னர் படையை, நாட்டை விட்டு வெளியேற்ற அவ ருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.இதே போல கடந்த ஜனவரி மாதமும் சிஐஏ வாக்னர் படையை வெளியேற்ற அழுத்தம் கொடுத்ததாகக்  கூறப்பட்டது.

பிரிகோசின் மரணத்திற்கு முன்பிருந்தே லிபி யாவின் எண்ணெய் நிறுவனங்களில் பாது காப்புப் பணியில்  வாக்னர் படை ஈடுபட்டுள்ளது. மேலும்  வாக்னர் படை பல வகையில் ஹப்தரின் படைக்கு பக்க பலமாக உள்ளதோடு அப்படை மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை லிபியா விற்குள் விடாமல் மறைமுகமாக ரஷ்யா முறி யடித்து வருகிறது. இந்நிலையில் வாக்னர் படைத் தலைவர் பிரிகோசின்  மரணத்தை தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் தனது அழுத்தத்தை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்வதன் பெயரில் லிபியாவில் தனது தடத்தை மீண்டும் பதிக்க முயற்சிக்கிறது.  2012 இல் லிபியாவில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் க்ரிஷ் ஸ்டீவன் கொல்லப்பட்டதை தொ டர்ந்து தூதரகம் துனிசியாவிற்கு மாற்றப்பட்டது.  பிறகு அவர்கள் ராணுவமும் கூட ஆப்பிரிக்க அமெரிக்க கூட்டு அல்லது பகுதி தலையீடாக மாறி தனது நேரடி தலையீட்டில் இருந்து விலகி யது. மேலும் லிபியாவின் அதிகாரிகள் மட்டத்தில் அமெரிக்கா செல்வாக்கின்றி இருப்பதால் லிபியா அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு செல்ல வாய்ப்பில்லை என ரஷ்யா கருதுகிறது.  தற்போது மீண்டும் லிபியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள அமெ ரிக்கா முயற்சிக்கும் நிலையில் வாக்னர் தனியார் கூலிப்படையை மறுசீரமைக்கும் வகையில் அந்தப் படையினருக்கான சலுகை ரஷ்ய ராணு வத்திற்கு இணையாக தரப்படும் என்றும் வாக்னர் குழுவினர் போரில் சிறை செல்லும் பட்சத்தில் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் பல சலுகைகளை அறிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.