world

img

சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 1000க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்  

நடுக்கடலில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் எரிந்து நாசமாகின.  

வோல்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஃபெலிசிட்டி ஏஸ் என்ற 650 அடி நீளமுள்ள மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.  அப்போது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே கப்பலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.    

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போர்ச்சுக்கீஸ் கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். ஃபெலிசிட்டி ஏஸ் ரக கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யவிருந்த லம்போர்கினி, போர்ஷே, ஆடி உள்பட சுமார் 3965 சொகுசு கார்கள் இருந்தன. 100க்கும் மேற்பட்ட கார்கள் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்ய இருந்தன.  

இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசு கார்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதையடுத்து நேற்று இரவு நிலவரப்படி கப்பலின் தீயை முழுமையாக அனைத்துவிட்டு கப்பலை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.  

மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.