world

img

மக்கள் கருத்தை மிதிக்கும் வலதுசாரிகள் : 12 லட்சம் பேர் வேலை நிறுத்தம்

பாரிஸ், மார்ச் 11- பிரான்ஸ் முழுவதும் நடக்கும் பெருந்திரள் போராட்டங்களை மீறி, அந்நாட்டின் செனட் அவையில் தொழிலாளர் விரோத ஓய்வூதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவு தரும் உறுப்பி னர்கள் அதிகமாக உள்ளனர். இதைப் பயன் படுத்திக் கொண்டு தனது ஓய்வூதியத் திருத்தங்க ளைக் கொண்டு வர அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் முயற்சித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே பிரான்ஸ் நாட்டின்  அனைத்துத் தரப்பினரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அந்நாட்டின் செனட் அவை யில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. புதிய சட்டத்தின்படி ஓய்வு பெறுவதற்கான வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்தி யிருக்கிறார்கள். மேலும், ஓய்வூதியம் பெறுவ தற்கான பங்களிப்புக் காலத்தையும் அதிகப் படுத்தியுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தால் பெரும் பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும். மக்களின் கடும் எதிர்ப்பு இருந்தாலும், செனட் அவையில் 201 உறுப்பினர் கள் அரசின் புதிய நாசகரத் திட்டத்திற்கு ஆதர வாக வாக்களித்துள்ளனர்.

105 உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்ற சோசலிச உறுப்பினர் மோனிக் லுபின், பிரான்சின் தொழிலாளர் துறை அமைச்சர் ஓலிவியர் டுஸ்சோப்ட்டைப் பார்த்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தவர் என்று வரலாற்றில் உங்கள் பெயர் எப்போதும் பொறிக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார். சட்டத்தில் மேலும் ஒரு திருத்தத்தையும் மேற் கொள்ளப் போகிறார்கள். இந்தத் திருத்தம் ஞாயிற் றுக் கிழமைக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த மசோதாவே நிறுத்தப்படும். அடுத்த வாரத்தில் இந்த மசோதா மக்கள வையில் விவாதிக்கப்படும். அங்கு இமானுவேல் மக்ரோனுக்கு எதிரானவர்கள் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. இந்த மசோதாவை அங்கு நிறை வேற்றுவது கடினமானதாகும். சில நாடாளு மன்ற உறுப்பினர்களைத் தன் பக்கம் மக்ரோன் இழுக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத் தையே புறக்கணித்து விட்டு சட்டத்தில் கையெ ழுத்திட வேண்டும். இந்த மாத இறுதிக்குள் எப்படியாவது சட்டத்தை இயற்றிவிட வேண்டும் என்று மக்ரோன் உறுதியாக இருக்கிறார்.

வேலை நிறுத்தம்

பிரான்சின்  செனட் அவையில் மசோதா நிறைவேறிய நாளன்று, தங்கள் பணியிடங்களில் இருந்து வெளியேறி நாட்டின் பல்வேறு நக ரங்களில் 12 லட்சம் பேர் பெருந்திரள் பேரணிகளில்  பங்கேற்றிருக்கிறார்கள். 35 லட்சம் தொழிலா ளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணி யாற்றும் ஊழியர்கள் இந்தப் புதிய ஓய்வூதி யத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுக்கும் வகையில் போராட்டங்களை வலுப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்துப் பெரிய தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மசோதா நிறை வேறிய நாளன்று நடந்த வேலை நிறுத்தம் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது வேலை நிறுத்தமாகும். அனைத்து வகைப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. தெருக்க ளில் இவ்வளவு பேர் இறங்கிப் போராடிக் கொண்டி ருப்பதைப் பார்த்தாவது, அரசு தனது திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத் தலை வர்களில் ஒருவரான லாரென்ட் பெர்ஜெர் கூறி யுள்ளார்.