world

img

இன்றைய உரத் தட்டுப்பாடு : நாளைய உணவுப் பிரச்சனையாக மாறும்

பாலி, (இந்தோனேசியா), நவ.15- இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு செவ்வாய், புதன்  ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறு கிறது.  மாநாட்டில் செவ்வாயன்று நடை பெற்ற முதல் அமர்வில் உணவு மற்றும்  ஆற்றல் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: காலநிலை மாற்றம், கொரோனா தொற்று நோய், உக்ரைன் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அதனுடன் தொடர் புடைய உலகளாவிய பிரச்சனைகள் என இவை அனைத்தும் உலகம் முழு வதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. சர்வதேச விநியோக சங்கிலி கள் அழிந்து வருகின்றன. அத்தியாவ சிய மற்றும் அடிப்படை தேவை உள்ள பொருட்களுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் ஏழை குடிமக்கள் சந்தி க்கும் சவால்கள் இன்னும் மோசமாகி உள்ளது. அன்றாட வாழ்வு அவர் களுக்கு ஏற்கனவே ஓர் போராட்டம்  நிறைந்தது. இரட்டைச் சோதனை களை எதிர்கொள்ளும் நிதித்திறன் அவர் களிடம் இல்லை. ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளும் இது போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்  கொள்ள நாம் தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் தவறி விட்டோம். எனவே இன்று ஜி-20 மாநாட்டின் விளைவுகள் குறித்து உல கம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு  ஏற்பட்டிருப்பதோடு, நமது குழு அதிக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். 

கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படு த்தியது. அதன் பிறகு அமைதிப் பாதை யில் செல்ல அக்காலத் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது இது எங்கள் முறை.  கொரோனா தொற்றுக் காலத்தி ற்குப் பிந்தைய காலத்திற்கு ஒரு புதிய உலகை  உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாது காப்பை உறுதிப்படுத்த உறுதியான மற்றும் கூட்டு முயற்சிகளை மேற் கொள்வது காலத்தின் தேவை.  புத்தர், காந்தியின் புனித பூமியில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு நடை பெறும் போது, ​​உலகம் முழுவதும் அமைதியாக உள்ளது என்ற செய்தி யை தெரிவிக்க நாம் அனைவரும் ஒன்றி ணைவோம். உடன்படுவோம் என்று நம்புகிறேன்.

கொரோனா தொற்றுநோய் பரவ லின் போது, ​​இந்தியா தனது 1.3 பில்லி யன் மக்களின் உணவுப் பாதுகாப்பை  உறுதி செய்தது. அதே நேரத்தில், உணவு தானியங்கள் தேவைப்படும் பல் வேறு நாடுகளுக்கும் வழங்கப்பட்டது.  உணவுப் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் அதே நேரத்தில் உரத் தட்டுப் பாடு பெரும் நெருக்கடியைச் சந்தித்து  வருகிறது. இன்றைய உரத் தட்டுப்பாடு தான் நாளைய உணவுப் பிரச்சனையாக மாறும். (தட்டுப்பாட்டிற்கு வித்திடும்). இது நடக்கும் போது இதற்கான தீர்வு உலக நாடுகளிடம் இருக்காது. உரம் மற்றும் உணவு தானியங்களின் விநி யோகச் சங்கிலியை தொடர்ந்து நிலை  நிறுத்துவதற்கான பரஸ்பர ஒப்ப ந்தத்தை நாம் மேம்படுத்த வேண்டும்.

இயற்கை விவசாயமும் - இந்தியாவும்

இந்தியாவில், நிலையான உணவுப்  பாதுகாப்பிற்காக, இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது தினை போன்ற சத்தான, பாரம்பரிய உணவு தானியங் களை மீண்டும் பிரபலப்படுத்துகிறோம். தினை வகைகள் உலகளாவிய ஊட்டச் சத்து குறைபாட்டை மட்டுமல்ல பசியை யும் தீர்க்கும். இது தீர்வாக அமைய லாம் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு  “சர்வதேச தினை” ஆண்டை நாம் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். உலகப் பொருளாதாரம் மிக  வேகமாக வளர்ந்து வரும் தருணத்தில்,  இந்தியாவின் ஆற்றலும்-பாதுகாப்பும் உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.  எரிசக்தி விநியோகம்-கட்டுப்பாடு உலகளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக விளங்கும் இந்தியா வின் எரிசக்தி பாதுகாப்பு சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியம். எரிசக்தி சந்தை யில் ஆற்றல் மற்றும் நிலைத்தன்மை யின் விநியோகத்திற்கு எந்த கட்டுப் பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டில், நமது மின்சாரத்தில் சுமார் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங் களில் இருந்து உற்பத்தி செய்யப்படும். கால நிர்ணயம் மற்றும் மலிவான நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம். 2030- ஆம் ஆண்டுக்குள் மின்சாரத்தேவை யில்  பாதி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும்.   ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் போது இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் சர்வ தேச அளவில் தீர்வுகள் ஏற்படுத்துவதற் கான பணிகளை நாம் மேற்கொள் வோம் என்றார்.