world

img

இந்தியாவில் கொரோனா தாக்கிய 15 சதவீதம் பேருக்குத்தான் சிகிச்சை தேவை.... உலக சுகாதார அமைப்பு  கூறுகிறது.....

ஜெனீவா:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஆக்சிஜன் அவசியமாகிறது என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் தெரிவித்துள்ளார். தற்போது பிரச்சனையின் ஒரு பகுதி என்னவென்றால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர்மருத்துவமனைகளுக்கு விரைகிறார்கள். (அவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டுபராமரித்து, கண்காணித்து வந்தாலே கொரோனாவை தடுக்க  முடியும்.)சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஹாட்லைன் மற்றும் டேஷ்போர்டுகள் மூலம் தகவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;