world

சிரியாவில் மீண்டும் எண்ணெய் கொள்ளை

டமாஸ்கஸ், ஜூலை 27- சிரியாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணத்தில் இருந்து எண்ணெய் கொள்ளை மேற்கொள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான30 வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. சிரியாவில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதாகக் கூறிக்கொண்டு சில குழுக்களை உருவாக்கி அக்குழுக்களின் ஆதரவுடன் தொடர்ந்து எண்ணெய் வளத்தை அமெரிக்கா கொள்ளையடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் பீப்பாய்களில் எண்ணெய் கொள்ளையடித்திருக்கிறார்கள். தற்போது மீண்டும் கொள்ளையடிப்பதற்காக 30 வண்டிகள் சிரியாவின் ஹசாகா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் சிரிய அரசு எதிர்ப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்காவிடமிருந்து நிதியும், ஆயுதங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஹசாகா மாகாணத்தில் இருந்து எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள வண்டிகளில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த மாகாணத்தில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்காக அந்த ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல்களை ஸ்புட்னிக் ஊடகக்குழுமத்தின் அரபு செய்திப்பிரிவு வெளியிட்டுள்ளது.